வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளை நினைத்துப் பார்ப்பது ஒரு சுவையான அனுபவம். அவைகளிலிருந்து வரும் நாட்களை வரைமுறைப்படுத்தும் பாடங்கள் கிடைப்பது மட்டுமல்ல, மனதில் இருக்கும் சிந்தனைகளை எழுத்துவடிவில் கொட்டி இறக்கி விடுவதால், தொடர்ந்து முன்னேறிச்செல்ல ஊக்கமும் உத்வேகமும் பிறக்கிறது. இவைகளை வாசிக்கும் தங்களுக்கும் சிலபல சிந்தனைச் செறிவுகள் வெளிப்படக்கூடும்.
இன்று 19.03.2015 ல் எங்கள் மகன் ஸ்டீவ் ஹட்ஸன் United Indian School, Kuwait-ல் தனது முதல் வகுப்பை பூர்த்தி செய்து இரண்டாம் வகுப்பிற்கான Promotion Card-ஐ வாங்கி, பின்னர் இரண்டாம் வகுப்பிற்கான Tution fees கட்டி, அதற்கான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வாங்கிக் கொண்டு வந்தோம். வீட்டுக்கு வந்த அவனுக்கு, ’இன்னும் டை மற்றும் ஷூ சாக்ஸ் இவைகளை வாங்கவில்லையே’ என்ற வருத்தத்தில் ’இப்பொழுதே அவைகள் வேண்டுமென’ அடம்பிடித்தான். எவ்வளவோ சொல்லியும் அடங்கவில்லை.
தனது பணிக்குச் செல்ல நேரமாகிவிட்ட படியால், எனது மனைவி சென்றுவிட, நான் மட்டும் ’அவனை உரிய நேரத்தில் கிடைக்கும் கவலைப்படாதே’ என கூறி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன்...அமைதியாவதாக இல்லை. ஒன்றுமல்ல... எல்லாம் ஒரு அடம் தான். ஒருகட்டத்தில், ’நானெல்லாம் உன்னைப் போன்று 5 வயதாக இருக்கும் போது’.... என்று ஆரம்பித்து ஒருசில சுவாரசியமான மற்றும் உணர்ச்சிகரமான எனது கடந்துவந்த பாதைகளை திரும்பிப் பார்த்து நினைவுகூர்ந்த போது... அவனுக்குப் புரிந்ததோ என்னவோ, ஆனால் அமைதியாகிவிட்டான்.
தொடர்ந்து அவன் தனது வழக்கமான பொழுதுபோக்கு காரியங்களை (இங்கு வேறு என்ன... TV, அதிலும் அவனுக்குரிய சானல் மற்றும் Tab ) தொடர, நான் மட்டும் அப்படியே, தலைசாய்ந்து சற்று நேரம் அயர்ந்து விட்டேன். தூங்கினேனா... கனவா...நினைவலைகளா... என ஒன்றுன் தெரியவில்லை. சிறுவயது முதற்கொண்டு நான் கடந்து வந்த நினைவுப் பாதைகளில் ஒரு வேகமான பயணம் போன்று அது காணப்பட்டது. 10 நிமிடங்களில் விழித்துக் கொண்டேன்.
கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்... கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் என்ற தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல்வரிகள் நினைவில் வர, இவைகளை எழுத்துவடிவில் அவ்வப்போது வடித்துவிடுவது என முடிவு செய்து உடனே இந்த பிளாக்-கை ஆரம்பித்து இந்த ஆரம்ப வரிகளை பதிவிட்டேன். இது ஒரு ஆரம்பமே... வரும் நாட்களில் இது வளரும்!
இன்று 19.03.2015 ல் எங்கள் மகன் ஸ்டீவ் ஹட்ஸன் United Indian School, Kuwait-ல் தனது முதல் வகுப்பை பூர்த்தி செய்து இரண்டாம் வகுப்பிற்கான Promotion Card-ஐ வாங்கி, பின்னர் இரண்டாம் வகுப்பிற்கான Tution fees கட்டி, அதற்கான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வாங்கிக் கொண்டு வந்தோம். வீட்டுக்கு வந்த அவனுக்கு, ’இன்னும் டை மற்றும் ஷூ சாக்ஸ் இவைகளை வாங்கவில்லையே’ என்ற வருத்தத்தில் ’இப்பொழுதே அவைகள் வேண்டுமென’ அடம்பிடித்தான். எவ்வளவோ சொல்லியும் அடங்கவில்லை.
தனது பணிக்குச் செல்ல நேரமாகிவிட்ட படியால், எனது மனைவி சென்றுவிட, நான் மட்டும் ’அவனை உரிய நேரத்தில் கிடைக்கும் கவலைப்படாதே’ என கூறி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன்...அமைதியாவதாக இல்லை. ஒன்றுமல்ல... எல்லாம் ஒரு அடம் தான். ஒருகட்டத்தில், ’நானெல்லாம் உன்னைப் போன்று 5 வயதாக இருக்கும் போது’.... என்று ஆரம்பித்து ஒருசில சுவாரசியமான மற்றும் உணர்ச்சிகரமான எனது கடந்துவந்த பாதைகளை திரும்பிப் பார்த்து நினைவுகூர்ந்த போது... அவனுக்குப் புரிந்ததோ என்னவோ, ஆனால் அமைதியாகிவிட்டான்.
தொடர்ந்து அவன் தனது வழக்கமான பொழுதுபோக்கு காரியங்களை (இங்கு வேறு என்ன... TV, அதிலும் அவனுக்குரிய சானல் மற்றும் Tab ) தொடர, நான் மட்டும் அப்படியே, தலைசாய்ந்து சற்று நேரம் அயர்ந்து விட்டேன். தூங்கினேனா... கனவா...நினைவலைகளா... என ஒன்றுன் தெரியவில்லை. சிறுவயது முதற்கொண்டு நான் கடந்து வந்த நினைவுப் பாதைகளில் ஒரு வேகமான பயணம் போன்று அது காணப்பட்டது. 10 நிமிடங்களில் விழித்துக் கொண்டேன்.
கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்... கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் என்ற தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல்வரிகள் நினைவில் வர, இவைகளை எழுத்துவடிவில் அவ்வப்போது வடித்துவிடுவது என முடிவு செய்து உடனே இந்த பிளாக்-கை ஆரம்பித்து இந்த ஆரம்ப வரிகளை பதிவிட்டேன். இது ஒரு ஆரம்பமே... வரும் நாட்களில் இது வளரும்!
No comments:
Post a Comment