எனக்கு இன்றுடன் 40 வருடங்கள் முடிவடைந்து நாளை (30.04.15) முதல் எனது வயது நாற்பது ஆகிறது. இதுவரையும் என்னை உருவாக்கி, உருப்படுத்தி, பத்திரமாக பாதுகாத்து வந்த என் தேவாதி தேவனுக்கு மகிமையும் துதியும் நன்றியும் செலுத்துகிறேன்.
இந்த நாற்பது வருடங்களிலும் உலகப்பிரகாரமாக என்னை பெற்றெடுத்து வளர்த்து உருவாக்கிய என் பெற்றோர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த நாள்வரையிலும் தேவனுடைய கிருபையினால் அவர்கள் இருவரும் நலமுடன் இருக்க அருள் செய்யும் தேவாதிதேவனுக்கு மீண்டும் துதிகளைச் செலுத்துகிறேன்.
எனக்கு நாற்பது வயதா? என்னால் நம்பமுடியவில்லை. ஏன் ? எனது பிறந்த நாள் எதுவென்று யாருக்கும் தெரியாத காரணத்தினாலா? மீசையைத் தவிர மற்றபடி இளமையாகத் தானே இருக்கிறேன் என்ற சுய உணர்விலா? அல்லது வயதாகி விட்டதை ஏற்றுக் கொள்ளமுடியாத பக்குவமா? நானறியேன்...
இந்த கட்டத்தில் எனது எண்ண அலைகள் என்ன? எவைகளை பதிவிட விரும்புகிறேன்? எனக்கே தெளிவில்லை. இருப்பினும் நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாதிருப்பதும் கர்த்தருடைய சுத்த கிருபையே. அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை என்ற வசனமே தெளிவாக எண்ணத்தில் வட்டமிடுகிறது.
எத்தனையோ தருணங்களில் எதிபாரா விபத்து சூழ்நிலைகளில் இருந்து தப்புவிக்கப் பட்ட நினைவுகள்; தேவனது பார்வையில் நான் உயிரோடிருக்க தகுதியில்லாத நிலைகளிலும் என்னை தமது சுத்தகிருபையால் தனது மகனாக தக்கவைத்திருக்கும் அன்பினை எண்ணி அவருக்கு ஆனந்த துதி பலிகள் ஏறெடுக்கிறேன்.
இந்த நாற்பது வருடங்களிலும் உலகப்பிரகாரமாக என்னை பெற்றெடுத்து வளர்த்து உருவாக்கிய என் பெற்றோர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த நாள்வரையிலும் தேவனுடைய கிருபையினால் அவர்கள் இருவரும் நலமுடன் இருக்க அருள் செய்யும் தேவாதிதேவனுக்கு மீண்டும் துதிகளைச் செலுத்துகிறேன்.
எனக்கு நாற்பது வயதா? என்னால் நம்பமுடியவில்லை. ஏன் ? எனது பிறந்த நாள் எதுவென்று யாருக்கும் தெரியாத காரணத்தினாலா? மீசையைத் தவிர மற்றபடி இளமையாகத் தானே இருக்கிறேன் என்ற சுய உணர்விலா? அல்லது வயதாகி விட்டதை ஏற்றுக் கொள்ளமுடியாத பக்குவமா? நானறியேன்...
இந்த கட்டத்தில் எனது எண்ண அலைகள் என்ன? எவைகளை பதிவிட விரும்புகிறேன்? எனக்கே தெளிவில்லை. இருப்பினும் நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாதிருப்பதும் கர்த்தருடைய சுத்த கிருபையே. அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை என்ற வசனமே தெளிவாக எண்ணத்தில் வட்டமிடுகிறது.
எத்தனையோ தருணங்களில் எதிபாரா விபத்து சூழ்நிலைகளில் இருந்து தப்புவிக்கப் பட்ட நினைவுகள்; தேவனது பார்வையில் நான் உயிரோடிருக்க தகுதியில்லாத நிலைகளிலும் என்னை தமது சுத்தகிருபையால் தனது மகனாக தக்கவைத்திருக்கும் அன்பினை எண்ணி அவருக்கு ஆனந்த துதி பலிகள் ஏறெடுக்கிறேன்.